புது வரவு :
Home » , » முத்தமே முதற்படி

முத்தமே முதற்படி


முத்தங்களே
மொத்தத்திற்கும்
முதற்படி..
முத்தங்கள் தீர்ந்து போனபின்
மொத்தத்தையும் தேடி
பயணிக்க வேண்டியிருக்கிறது..


உன் உதடுகள்
என் உதட்டை
உட்படுத்திக்கொள்ளும்போதுதான்
எச்சில்கூட சூடாகிப்போகும் 
வேதியியல் மாற்றத்தை உணர்கிறேன்..

உறங்கிக் கொண்டிருந்த
உண்ர்ச்சிகள்
விழித்தெழுந்தென்னை
விழுங்க ஆரம்பித்துவிட்டது..
உணர்வுகள் உறங்க ஆரம்பித்துவிட்டது..

இருவரது
மூச்சுக்காற்றும்
முத்தமிட்டுக் கொள்கிறது..இல்லை
யுத்தமிட்டுக்கொள்கிறது..

கண்ணிமைகள் நான்கும்
கைகுலுக்கிக் கொள்கின்றன..
மூக்கு நுனிகள்
கூர்தீட்டப்படுகின்றன..

புருவங்கள் போல
இடைவெளியில்லாமல்
உருவங்கள் உள்வாங்கிக்கொள்கின்றன..


கருவிழியிரண்டும்
தாறுமாறாய்
சுழன்று கொண்டிருக்கின்றன..
வெட்கங்கள்
ஒவ்வொன்றாய்
கழன்று கொண்டிருக்கின்றன....

உடுத்தியிருக்கும் உடைகள்
தானாக களைந்துபோக எத்தனிக்கின்றன..
பூமிதனை தொட்டணைக்கின்றன..

உற்பத்தியான வியர்வை
மேடு பள்ளங்களைக் கடந்து 
ஊர்ந்து உயிர்வரை நனைக்கிறது..
தனக்கிதுதான் மோட்சம் என்று
வியர்வை நினைக்கிறது..

இருவருக்கும் இடையில்
காற்று புக முயன்று
தோற்றுப் போகிறது..அக் 
காற்று வேகிறது.

இரண்டு ஒன்றாகிறது..
-------------------------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

21 comments:

  1. முத்தமே
    மொத்தத்திற்கும்
    முதற்படி..
    முத்தங்கள் தீர்ந்து போனபின்
    மொத்தத்தையும் தேடி
    பயணிக்க வேண்டியிருக்கிறது..
    >>
    மறுபடியும் முதல்லில்ருந்தா?

    ReplyDelete
  2. //முத்தமே
    மொத்தத்திற்கும்
    முதற்படி..//


    சபாஷ்....உதட்டில் ஆரம்பித்து.....கவிதை த்தீயா இருக்கு

    ReplyDelete
  3. முத்து முத்தான முத்தங்களா!

    ReplyDelete
  4. முத்தங்கள் தீர்ந்து போன பின்... முத்தங்கள் தீருமா என்ன கவிஞரே... தொடர்கதை அல்லவோ... கவிதை மோகத் தீயை கொளுந்துவிட்டு எரிய வைக்கிறது.

    ReplyDelete
  5. நல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. இருவருக்கும் இடையில்
    காற்று புக முயன்று
    தோற்றுப் போகிறது..அக்
    காற்று வேகிறது.

    இரண்டு ஒன்றாகிறது..// அருமையான வரிகள்..

    ReplyDelete
  7. மூச்சுமுட்டுகிறது...:) அருமை தோழரே..

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    /சி.பி/நண்டு/மனசாட்சி/விக்கி/கணேஷ்/ராஜி/கருன்/மயிலன்/

    ReplyDelete
  9. மொத்தமும் தீர்ந்துப்போக யுத்தம் தொடுத்தாலும் தீராது உள்ளுணர்வுகள் பயணிக்க உயிர்பிக்கும் அன்பில் வளர்பிக்கும் என்றும் ........

    ReplyDelete
  10. முத்தச் சத்தம் எங்கும்...சந்தோஷம் !

    ReplyDelete
  11. முத்த மழை.
    நனைந்து ஜலதோஷம் பிடித்து விட்டது கவிஞரே.

    இந்த முத்தங்களையும் சுவையுங்கள்

    http://sivakumarankavithaikal.blogspot.com/2011/01/8.html

    ReplyDelete
  12. என்னமா எழுதிரிங்க சார்... சான்சே இல்லை. கவிதை எழுதறவங்களை பார்த்த பொறாமையா இருக்கு சார் , கதை , கட்டுரை எப்படியோ ஒப்பேதிறலாம். ஆனா கவிதை நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.



    இன்று.

    காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

    ReplyDelete
  13. ///கருவிழியிரண்டும்
    தாறுமாறாய்
    சுழன்று கொண்டிருக்கின்றன..
    வெட்கங்கள்
    ஒவ்வொன்றாய்
    கழன்று கொண்டிருக்கின்றன..///

    சந்தவரிகள்
    காந்த வரிகளாய்....

    ReplyDelete
  14. கண்ணிமைகள் நான்கும்
    கைகுலுக்கிக் கொள்கின்றன..//

    இதுவே நான் மிக ரசித்து நகரமறந்த இடம்.

    பாராட்டுக்கள் தோழர்.

    ReplyDelete
  15. சத்தமில்லாமல் சிந்தை கலைக்கும் ஒரு உன்னத படைப்பு ... வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  16. வேதியல் மாற்றத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் கவிஞரே..

    ReplyDelete
  17. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போகப் படாஅ முயக்கு.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com