புது வரவு :
Home » , » நாட்கள் போதவில்லை

நாட்கள் போதவில்லை

முகம் தெரியாத
மனிதர்கள் தான்
நம் முகத்தைப் பலருக்கும்
தெரிய வைக்கிறார்கள்..
----------------------------------
நாட்கள் போதவில்லை..
வாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..
-----------------------------------
எதிர்காலத்தில்
எப்படி வாழவேண்டுமென்று
இறந்தகாலமே
கற்றுக் கொடுக்கிறது..
-----------------------------------
-----------------------------------
இருப்பதை வைத்துக்கொண்டு
வாழ் என்கிறார்கள்..
இருக்கிறதா இல்லையா என்று
எப்போதுமே கேட்பதில்லை..
-----------------------------------
தெருவில் 
பணத்தைக் கண்டெடுத்தபோது 
ஏற்பட்ட சந்தோசம்
பொய்யானதென்று
அதே தெருவில் பணத்தை
தொலைத்தபோதுதான் தெரிந்தது.
---------------------------------
படுக்கையில் படுத்தவுடன்
இன்று என்னென்ன செய்தோம் என்று
யோசிப்பதை விட நாளை 
என்னென்ன செய்யப்போகிறோம் என்று
யோசித்தல் சிறப்பு..
-------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

14 comments:

  1. எளிமையான வரிகளில் மனித வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்... அருமை..

    ReplyDelete
  2. அனைத்துமே அருமை.
    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  3. ஆமா, நாளைக்கு என்ன செய்யப்போறோம்?

    ReplyDelete
  4. ///இருப்பதை வைத்துக்கொண்டு
    வாழ் என்கிறார்கள்..
    இருக்கிறதா இல்லையா என்று
    எப்போதுமே கேட்பதில்லை..///

    நிதர்சனத்தைச் சொல்லிப் போகும் வரிகள்..!!!

    தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே.. அதுபோலதான்.. பணத்தை இழந்தவனுக்கும், பணத்தை கண்டெடுத்தவனுக்கும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்...!!!

    பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!!

    ReplyDelete
  5. சீரிய சிந்தனைகள்...

    ReplyDelete
  6. முகம் தெரியாத | மனிதர்கள் தான் | நம் முகத்தைப் பலருக்கும் | தெரிய வைக்கிறார்கள்..
    -இந்த வரிகள் மனதில் ஒட்டிக் கொண்டன கவிஞரே... உண்மையில் தோய்ந்த வரிகள். பிரமாத்ம். உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //இருப்பதை வைத்துக்கொண்டு
    வாழ் என்கிறார்கள்..
    இருக்கிறதா இல்லையா என்று
    எப்போதுமே கேட்பதில்லை..//
    அருமை

    ReplyDelete
  8. ////படுக்கையில் படுத்தவுடன்
    இன்று என்னென்ன செய்தோம் என்று
    யோசிப்பதை விட நாளை
    என்னென்ன செய்யப்போகிறோம் என்று
    யோசித்தல் சிறப்பு..////

    சிறப்பான வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது காரணம் நான் எப்பவும் இப்படி சிந்திப்பவன் தான் இன்று என்ன செய்தேன் என்பதை விட நாளை என்ன செய்யப்போகின்றேன் என்று

    வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  9. வாழ்வியல் ஒன்றைவிட ஒன்று அருமையாக இருக்கிறது !

    ReplyDelete
  10. இருப்பதை வைத்துக்கொண்டு
    வாழ் என்கிறார்கள்..
    இருக்கிறதா இல்லையா என்று
    எப்போதுமே கேட்பதில்லை..
    -----------------------------------
    தெருவில்
    பணத்தைக் கண்டெடுத்தபோது
    ஏற்பட்ட சந்தோசம்
    பொய்யானதென்று
    அதே தெருவில் பணத்தை
    தொலைத்தபோதுதான் தெரிந்தது.
    ---------------------------------


    அழகாக
    ஆழமாக
    சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் கவிஞரே..

    ReplyDelete
  11. "நாளை
    என்னென்ன செய்யப்போகிறோம் என்று
    யோசித்தல் சிறப்பு.."

    >>>

    இது தான் மாப்ள டாப்பு...இதை சிந்த்திதாலே பல விஷயங்கள் நன்றாக நடக்கும்!

    ReplyDelete
  12. உரத்த சிந்தனை
    படிப்போரையும் சிந்திக்கச் செய்து போகும் பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 7

    ReplyDelete
  13. இயற்கைபோல மிக எளிமையாக சிந்தித்து தந்து இருக்கின்றீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com