புது வரவு :

ஈரோட்டுச் சூரியன் 4

                                                                                                                              /பெரியாரியல்/

 

ஈரோட்டுச் சூரியன் - 4

   

    வணக்கம் தோழர்களே. உண்மை இதழில் 'புதுக்கவிதையில் புரட்சிக்காரரின் வரலாறு' எனும் பக்கத்தில் 'ஈரோட்டுச் சூரியன்' என்ற தலைப்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதி வருவது நீங்கள் அறிந்ததே.தொடரின் நான்காது அத்தியாயம்  01.11.2012 உண்மை இதழில் வெளியானது. உங்களுக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

 


றாவது வயதில்
திண்ணைப்பள்ளியில்
இராமனை சேர்த்தனர்;
உடன் பயிலும் 
சிறுவர்களைப் பார்த்தனர்;

இராமனுடன் 
பயிலும் சிறுவர்கள்
வெவ்வேறு ஜாதியினர்;
ஆயினும் ஒரே வீதியினர்;

படிக்கும்
பாடத்தை விடவும்
குடிக்கும் தண்ணீர் பற்றி
விளக்கம் கொடுப்பார்
சின்னத்தாயம்மை..

பாடம் படிக்கையில் தாகம் எடுப்பின்
வாத்தியார் வீட்டில் மட்டுமே
நீர் அருந்த வேண்டும்..
அவர் ஓதுவார் ஜாதி;
மற்றவரெல்லாரெல்லாம்
மட்ட ஜாதி;

மற்ற ஜாதியினரோடு
ஒட்டும் உறவும் கூடாது;
நம் ஜாதிக்கு அது ஆகாது;
நாயக்கர் இராமனை
பணித்தார்;
இராமனும்
வாத்தியார் வீட்டில்
தாகத்தை தணித்தார்;

இராமன் 
நீர் அருந்திய குவளையை
வாத்தியார் வீட்டுப் பெண்
நான்கு முறை
கழுவியபின் வைக்கும்;
இராமனின் மனதை
அது தைக்கும்;

நீரருந்தும் வேளை
இராமனின் உதடுகள்
குவளையில் பட்டால்
அப்பெண் வையும்-அது
இராமனின் கோபத்தை 
உற்பத்தி செய்யும்;

மேல் ஜாதி வீட்டில்
தாகத்தை தணிப்பதை 
தவிர்த்தார்;
கீழ் ஜாதி வீட்டில் 
தாகத்தை தணித்தார்;

புழங்கக்கூடாது
என்று சொன்ன
வீடு சென்று
நட்பு பாராட்டுவார்;
வீட்டார் எதிர்த்தால் 
போராடுவார்;

கீழ் ஜாதி என
ஒதுக்கப்பட்டிருந்த நண்பர்கள்
இராமனை
அன்பாய் கூப்பிடுவர்;
தின்பண்டங்களை சேர்ந்து
சாப்பிடுவர்;

கீழ் சாதி வீட்டு
பண்டங்களையும்
உணவுகளையும்
இவர் உண்ட செய்தி
சின்னத்தாயம்மைக்கு எட்டியது;
அவரது உதடுகள்
தானாய் திட்டியது;


நாயக்கர் 
அவ்வப்போது கண்டிப்பார்;
தன் வேலையை
முழுதாய் கவனிப்பார்;
பாட்டியிடம்
வளர விட்டது தவறா?
அவர் சரியாய் வளர்க்கின்றாரா?
சின்னத்தாய் 
கவலையிலேயே இருப்பார்;
இராமனை
கொஞ்சமாய் வெறுப்பார்;

பள்ளிக்குச் செல்வதாலே
பலபேருடன் பழக்கம்;
கீழ் ஜாதியினரோடு
புழக்கம்;

நாயக்கரிடம்
சின்னத்தாயம்மை
வருத்தப்பட
இராமன்
பள்ளிக்குச் செல்வது
நிறுத்தப்பட்டது;

ஈரோட்டுச் சூரியன் உதிக்கும்...

- மதுமதி -
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

7 comments:

  1. கவிதை நடை அருமை!

    ReplyDelete
  2. \\\நான்கு முறை
    கழுவியபின் வைக்கும்;
    இராமனின் மனதை
    அது தைக்கும்;///


    - கவிதை நயம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி..மகிழ்ச்சி

      Delete
  3. பாராட்டுக்கள் நயமிக்க கவிதை வரிகள்

    ReplyDelete
  4. மனதில் தைக்கும் வரிகள்... அருமை...

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com