புது வரவு :
Home » , » வாசற்கதவைத் தட்டுகிறது

வாசற்கதவைத் தட்டுகிறது

எண்ணத்தில்
எழுவது ஒன்று.
எழுத்தாய்
விழுவது ஒன்று.
ஆக ஒரே யோசனையில்
இரு செய்திகளின் வெளிப்பாடு..


யோசிக்கும்போது
வெளிப்படாத விசயம்
யோசித்துவிட்டு
ஓய்வெடுக்கும்போது
ஓரமாய் வந்து நிற்கிறது..


உணவருந்தும்போது
மனமது போதுமென்கிறது
வயிறது போதாதென்கிறது
முடிவெடுப்பதற்குள்
உணவு பசியாறி விடுகிறது..


நம்மிடம் ஒருவர்
பேசிக்கொண்டிருக்கும்போது
ஏதோவொன்றை நாம்
யோசித்துக்கொண்டிருக்கிறோம்.
இரண்டுமே முற்றுப்பெறுவதில்லை..


வாய்ப்புக்களைத்
தேடும்போது
வேகமாய் இருக்கிறோம்..
வேகம் குறைந்த பிறகே
வாய்ப்புகள்
வாசற்கதவைத் தட்டுகிறது..


தொலைத்துவிட்டுத் தேடினால்
தொலைந்து போனது கிட்டும்..
எதையும் தொலைக்காமல்
தேடும்போது தான்
ஏராளம் கிட்டுமெனத் தோன்றுகிறது..


காலம் வரும் வரை
காத்திருக்கிறோம்..
நாம் வரும் வரை
காலம்
காத்திருக்க மறுக்கிறது
----------------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

10 comments:

  1. உணவருந்தும்போது
    மனமது போதுமென்கிறது
    வயிறது போதாதென்கிறது
    முடிவெடுப்பதற்குள்
    உணவு பசியாறி விடுகிறது..//
    வார்த்தைகள் விளையாடி இருக்கிறது தோழா...

    ReplyDelete
  2. //தொலைத்துவிட்டுத் தேடினால்
    தொலைந்து போனது கிட்டும்..
    எதையும் தொலைக்காமல்
    தேடும்போது தான்
    ஏராளம் கிட்டுமெனத் தோன்றுகிறது..//

    தேடல் இருப்பவர்களுக்கே வாழ்க்கை அள்ளிக்கொடுக்கும் என்பதை எளிய தமிழில் அழகாக சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  3. //வாய்ப்புக்களைத்
    தேடும்போது
    வேகமாய் இருக்கிறோம்..
    வேகம் குறைந்த பிறகே
    வாய்ப்புகள்
    வாசற்கதவைத் தட்டுகிறது..//

    வாய்ப்புக்கள் வாசற்கதவுகளை தட்டும்போதே கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.வாழ்வில் உயர எல்லோர்க்கும் ஓர் காலம் வரும்.காத்திருப்போம்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி /கருன்/நண்டு@நொரண்டு/ஷர்மி/கவிதைவீதி சௌந்தர்/சித்தாரா மகேஷ்/

    ReplyDelete
  5. யோசிக்கும்போது
    வெளிப்படாத விசயம்
    யோசித்துவிட்டு
    ஓய்வெடுக்கும்போது
    ஓரமாய் வந்து நிற்கிறது..

    உண்மைகளை உரித்து காட்டும் கவிதை வரிகள் அருமை நண்பரே

    தமிழ் மணம் 5-வது ஓட்டு

    ReplyDelete
  6. யோசிக்கும்போது
    வெளிப்படாத விசயம்
    யோசித்துவிட்டு
    ஓய்வெடுக்கும்போது
    ஓரமாய் வந்து நிற்கிறது..


    ஆமா உண்மைதான்.

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com