புது வரவு :
Home » » 3)நீத்தார் பெருமை

3)நீத்தார் பெருமை

நீத்தார் பெருமை


21)
இறக்கும் வரை
ஒழுக்கத்தோடு
வாழ்ந்தவர்களின் சிறப்பை
இறந்தபின்பும் சொல்வது
நல்ல நூல்களே..
குறள்-21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
------------------------------
22)
இதுவரை
பிறந்து இறந்தவர்களை
கணக்கிடுவது போலத்தான்
விருப்பு வெறுப்புகளை
துறந்து வாழ்ந்தவர்களின்
பெருமைகளை கணக்கிடுவதும்..
குறள்-22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று.
--------------------------------------
23)
இம்மை மறுமை அறிந்து
இல்லறம் துறந்து
துறவறம் புரிந்தோரின் 
பெருமைகள் தான்
உலகிலே சிறந்தது..
குறள்-23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு..
--------------------------------------------
24)
அறிவென்னும் 
ஆயுதத்தால்
அய்ம்புலனையும்
அடக்கியாள்பவன்
மோட்சமெனும்
வீட்டிற்கு வித்தாவான்..
குறள்-24)
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
-----------------------------------------
25)
அய்ம்புலன் ஆசைகளை 
அடக்கியாண்டவனின் 
ஆற்றலுக்கு
இந்திரனே சான்றாவான்..
குறள்-25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
------------------------
26)
செய்ய முடியாத
கடின காரியங்களை
செய்யும் ஆற்றல்
பெரியோருக்குண்டு
சிறியோருக்கில்லை..
குறள்-26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--------------------------------
27)
ஐவகை உணர்ச்சிகளை
ஆராய்ந்து அறிந்தவனின்
அறிவிலே அகிலமே
அடங்கி கிடக்கிறது..
குறள்-27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
------------------------------------------------
28)
அகிலத்தில் வாழ்ந்த
ஆன்றோர் பெருமையை
அழிந்து போகாமலிருக்கும்
அற நூல்களே இன்னும்
அரங்கேற்றுகின்றன..
குறள்-28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்..
-------------------------------------------
29)
குணத்தில் குன்றைப்போல
உயர்ந்து நிற்பவரின் கோபம் 
ஒரு கணத்திற்குள்
உயிரிழந்துபோகும்..
குறள்-29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது..
-------------------------------------------
30)
அனைத்து
உயிர்களையும்
அன்பால் அணைத்தவன்
அந்தணன் ஆவான்..
குறள்-30
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்..
---------------------------------                           முகப்பு
                                                                 அறத்துப்பால் 

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. அன்பின் மதுமதி - நீத்தார் பெருமை வ்சன நடையில் கவிதையாக மிளிர்கிறது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com