தமிழர்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை
முந்தைய தி.மு.க ஆட்சியில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
அறுபது ஆண்டு கதை
"இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "விய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன'. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
"அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.
பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான "சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி' எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு "குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி' கெட்டபுத்தி என்று பொருள். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.
ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.
ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் "எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் "எந்த முறையிலும்' எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம்! தமிழர் மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
எஸ்.செல்வராஜ்,கோ.சோ.கவியரசு(மேட்டூர்)அவர்கள்
01.10.11 ல் வெளியான நக்கீரன் பொது அறிவு இதழில் எழுதிய இந்தக்
கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க கீழ்காணும் சுட்டியில் செல்லவும்..
நன்றி..
நக்கீரன் பொது அறிவு உலகம்
சித்திரை பெயர் தமிழ் இல்லையென்றால் சரியான தமிழ்ப்பெயர் என்ன? 12 -மாதங்களுக்கும் சரியான தமிழ் பெயர்கள் என்ன?
ReplyDeleteநல்லதொரு வினாவைக் கேட்டீர்கள் சகோதரி..
Deleteசித்திரையின் தமிழ்ப்பெயர் - மேழம்
12 மாதங்களுக்கும் கீழே குறிப்பிடுகிறேன்..
1.சுறவம் -தை
ReplyDelete2.கும்பம் - மாசி
3.மீனம் - பங்குனி
4.மேழம் - சித்திரை
5.விடை - வைகாசி
6.ஆடவை - ஆனி
7.கடகம் - ஆடி
8.மடங்கல் - ஆவணி
9.கன்னி - புரட்டாசி
10.துலை - ஐப்பசி
11.நளி -கார்த்திகை
12.சிலை - மார்கழி
அறியாத செய்தி இது தோழரே...
Deleteஅறிய வைத்தமைக்கு நன்றி...
நான் வாசித்துவிட்டேன்! ஆங்கிலத்தில் ஒன்றை சொல்வார்கள். ‘சொல்லுங்கள். சொல்லுங்கள். சொன்ன பிறகு சொல்லுங்கள் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று!’ அந்த சொல்லாடல் இதற்கும் பொருந்தும்.
ReplyDeleteஇது தொடர்பாக நானும் ஒரு பதிவை தந்திருக்கிறேன். http://muransuvai.blogspot.in/2011/12/blog-post_29.html
ReplyDeleteநல்ல நாளில் பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteசித்திரை புத்தாண்டு முறை தமிழில்லை.. அது நிச்சயம் வட இந்திய சூர்ய நாட்காட்டியின் வழிவகையே. ஆனால் தை முதல் தமிழ் புத்தாண்டு என்பதற்கும் தரவு இல்லையே. அங்ஙனம் இருந்தால் விளக்குக, அறிய ஆவல்..
ReplyDeleteவிரைவில் இது குறித்து ஒரு கட்டுரை இடுகிறேன் தோழரே..
Deleteஇந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசித்தால் அதற்கான விளக்கம் இருக்கிறதே பார்க்கவில்லையா தோழரே..
Deleteஎனக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. ஆட்சி மாறும்போதெல்லாம் தமிழ்புத்தாண்டும் மாறும் என்கிறார்களே அது குறித்து சரியான விளக்கம் வேண்டும் சகோ.
ReplyDelete"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே....." என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழன்தானே முதலில் எழுத்து, பேச்சு, நாகரீகம், இத்யாதி என மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் என்று காலம் காலமாகச் சொல்கிறோம்? அப்படியாயின் அவன் ஏன் இதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அன்றே கொண்டுவரவில்லை? இன்னும் இந்த 21'ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு தர்க்கம்? வெட்கமாக இருக்கிறது! ஏதாவது செய்யுங்கள் அய்யா!
ReplyDeleteநல்ல அரிய தகவல்கள்! தமிழ் மாதங்களின் பெயரையும் பின்னூட்டத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇன்றைக்கு என்ன மரபாக உள்ளதோ அதை மாற்றக் கூடாது. சித்திரை ஒன்னாம் தேதி தமிழ் வருடப் பிறப்பு பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது, அதை ஏன் மாற்ற வேண்டும்?
ReplyDeleteதமிழனுக்கு நல்லது செய்யணும்னா, ஆட்சியில் இருந்த பொது சாராயக் கடைகளை மூடியிருக்கலாம், ஓட்டு பொறுக்க இலவசம் கொடுத்து மோசடி செய்யாம ஆட்சியின் போதே அவங்க சம்பாதிக்கும் திறனை மேம்படுத்த திட்டங்களைப் போட்டு முயன்று இருக்கலாம், தமிழக ஆற்று மணல் கொள்ளை போவதில் இருந்து தடுத்திருக்கலாம். மக்களிடம் பிரச்சாரம் செய்தும் திட்டங்கள் போட்டும் தமிழகம் முழுவதும் கேரளத்தைப் போல பசுமையாக்க எதையாவது செய்திருக்கலாம். தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து தாக்கப் படுவதற்கு நிரந்தர தீர்வுக்கு முயன்றிருக்கலாம். இது அத்தனையும் விட்டுட்டு தை முதல் தேதியை தமிழ் வருஷம்னு சொல்லிட்டா பாலாரும் தேனாரும் தமிழ்நாடு பூராவும் ஓடுமாம். கட்சிக்காரங்களுக்கும் சொந்தங்களுக்கும் பதவி என்றால் டில்லிக்கு நேரில் சக்கர நாற்காலியுடன் ஆஜர் காவிரிப் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, முல்லை பெரியாறு இதற்க்கெல்லாம் கடிதம்தான்.
"இதைக் கேட்டால், ஜெயலலிதா மட்டும் இதையெல்லாம் செய்தாரா?" என்ற பதில் கேள்விதான் வரும். நாம் கேட்பது, மேற்க்கண்டவற்றை செய்வதற்கு ஜெயலலிதாவை நீங்கள் ஏன் ஒப்பிட வேண்டும்? மக்களுக்கு நன்மை செய்யாததற்கு இன்னொரு மோசமான தலைவர்தான் உதாரணமா? நல்லாட்சி தந்து ஆட்சியை தக்க வைத்திருக்கலாமே? போங்கையா நீங்களும் உங்க வெங்காய புது வருடமும் வயிறு நெருப்பா எரியுது.
இந்த பதிவுக்கும் உங்கள் கருத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை ஜெயதேவ்.. இப்போதெல்லாம் நீங்கள் பதிவை முழுதாய் வாசிக்காமலேயே கருத்தை பதிகிறீர்கள் என நினைக்கிறேன்..
Deleteகுட்டன் என்று பெயர் இருந்தாலும் நான் தமிழனுங்க!புதிய தகவல்கள்!ஆண்டு சித்திரையில் பிறந்தால் என்ன,தையில் பிறந்தால் என்ன!எல்லாம் ஒண்ணுதான்!எதுவும் மாறப்போவதில்லை!
ReplyDelete