புது வரவு :
Home » , » நீ யாரெனத் தெரியவில்லை

நீ யாரெனத் தெரியவில்லை

முதன்முதலாய்
உன்னைப் பார்த்தபோது
நீ யாரெனத்தெரியவில்லை..
பிறகுதான் தெரிந்தது
நீதான் நானென்று..

சில வருடங்களாக
சிறை வைத்திருந்த
"உன்னைக் காதலிக்கிறேன்"
என்ற வாக்கியத்தை
உன்னை பார்த்தபிறகே
விடுதலை செய்ய முற்பட்டேன்..


உன் பார்வை
என் மீது பட்ட பிறகே
எனக்குள் முளை விட்டிருந்த
எனது காதல்
மெதுவாக வளரத் தொடங்கியது..

கவிதை எழுதும்போதும்
உன்னிடம் பேசும்போதும்
வார்த்தைகளைத் தேடித் தேடியே
சேர்க்க வேண்டியிருக்கிறது..

நாம் முதன்முதலாக
சந்தித்தபோது பேசிய 
வார்த்தைகள் கொஞ்சம்தான்
பேசிய நேரமோ அதிகம்..

ஒளிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது 
உண்மையெனில்-நம்
விழிச்சேர்க்கை
நடைபெறுவதனால்தான்
என்னில் உயிர் வாழ்கிறது.
இதுவும் உண்மைதான்..

நான் உன்னை
பலமுறை சந்திக்க
ஆசைப்படுகிறேன்..
எனது காதலோ
ஒரே ஒரு முறை
விவாகத்தை சந்திக்க
ஆசைப்படுகிறது..
------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

40 comments:

  1. Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..

      Delete
  2. காதலின் புது அர்த்தம் சொன்ன சுந்தர கவிதை
    அருமை அய்யா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழர்..

      Delete
  3. ஒளிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
    உண்மையெனில்-நம்
    விழிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    என்னில் உயிர் வாழ்கிறது.
    இதுவும் உண்மைதான்..


    அருமையான சொல்லாடல் தோழா!!
    அழகான கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழர்..

      Delete
  4. ம்ம்ம்.. நடக்கட்டும் .. நடக்கட்டும் .
    கல்யாணம் தான் . சேர்க்கை உவமை ஆஹா !
    பொங்கல் ஓஹோ போல சகோ ?

    ReplyDelete
  5. //நாம் முதன்முதலாக
    சந்தித்தபோது பேசிய
    வார்த்தைகள் கொஞ்சம்தான்
    பேசிய நேரமோ அதிகம்..//

    கண்களால் பேசினால் போதாதா ?
    அருமை.

    ReplyDelete
  6. அழகு கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. காதல் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டுவிட்டது.இனி என்ன !

    ReplyDelete
  8. அது நடந்து முடிந்துவிட்டது சகோதரி..பொங்கல் எப்பவும் சிறப்புதான்..தங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி..

    ReplyDelete
  9. துளிர்விட்ட காதலின்
    நிதர்சன ஆசை
    நிறைவேறினால் அழகு.......

    ReplyDelete
  10. // ஒளிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
    உண்மையெனில்-நம்
    விழிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    என்னில் உயிர் வாழ்கிறது.
    இதுவும் உண்மைதான்..//

    அறிவியல் உண்மைகள் களவியலுக்கும் பொருந்தும் என்பதை வெகு அழகாக உங்கள் சொல்லாடலால் விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தாங்கள் வருகை தந்ததற்கும் கருத்துக்கும்..

      Delete
  11. அழகாக சொல்லி சுபம் என முடித்த விதம் அருமை நன்றி

    ReplyDelete
  12. ////சில வருடங்களாக
    சிறை வைத்திருந்த
    "உன்னைக் காதலிக்கிறேன்"
    என்ற வாக்கியத்தை
    உன்னை பார்த்தபிறகே
    விடுதலை செய்ய முற்பட்டேன்..
    ////

    அருமையான வரிகள்
    அற்புதமான காதல் கவிதை பாஸ்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா தோழர் மகிழ்ச்சி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  13. ஒளிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
    உண்மையெனில்-நம்
    விழிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    என்னில் உயிர் வாழ்கிறது.///

    இந்த கவிதையில் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை.... சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா தோழர் எனக்கும் அதுதான் பிடித்தது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  14. கவிதை அழகாக இருக்கு...

    ReplyDelete
  15. முதன்முதலாய்
    உன்னைப் பார்த்தபோது
    நீ யாரெனத்தெரியவில்லை..
    பிறகுதான் தெரிந்தது
    நீதான் நானென்று.
    >>>
    உங்களை, காதல் முதல் பார்வையிலேயே பற்றிக் கொண்டதா?

    ReplyDelete
  16. Azhakaana kavithai!
    rasikkumpadi-
    irunthathu!

    ReplyDelete
    Replies
    1. நன்றி..தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
  17. ஒளிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
    உண்மையெனில்-நம்
    விழிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    என்னில் உயிர் வாழ்கிறது.
    இதுவும் உண்மைதான்.


    அருமை..
    மீ்ண்டும் மீண்டும் படித்தேன் கவிஞரே.

    நன்று.

    ReplyDelete
  18. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி முனைவரே..

    ReplyDelete
  19. //ஒளிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
    உண்மையெனில்-நம்
    விழிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    என்னில் உயிர் வாழ்கிறது.
    இதுவும் உண்மைதான்..//
    அழகிய உண்மை.அருமை.வாழ்த்துக்கள் சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோதரி..நன்றி.

      Delete
  20. கவிதை மிக அருமை!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  21. ஒளிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    மண்ணில் பயிர் வாழ்கிறதென்பது
    உண்மையெனில்-நம்
    விழிச்சேர்க்கை
    நடைபெறுவதனால்தான்
    என்னில் உயிர் வாழ்கிறது.
    இதுவும் உண்மைதான்..//

    பிடித்த வரிகள். அருமையான காதல் கவிதை மதுமதி அண்ணா.

    ReplyDelete
  22. அதே தான் ஒளிச் சேர்க்கை வரி எனக்கும் பிடித்தது. அருமை! வாழ்த்துகள். (திறந்த கதவு....வரலாம் என் வலைக்கும். தயக்கம் தேவையில்லைச் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  23. விழிச் சேர்க்கை ஒளிச் சேர்க்கை அருமைங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. படிக்கத்தூண்டும் அழகு கவிதை

    ReplyDelete
  25. கோவைக்கவி..

    நன்றி சகோ.

    ReplyDelete
  26. நன்றி..

    காளிதாஸ்

    யசோதாகந்த்.

    ReplyDelete
  27. கவிதை சுமந்த காதல் மிக இனிமையானது .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com