புது வரவு :
Home » , , , , » டி.என்.பி.எஸ்.சி-எண்ணும்மை,உம்மைத்தொகை,உரிச்சொற்றொடர் கண்டறிதல் பாகம் 20

டி.என்.பி.எஸ்.சி-எண்ணும்மை,உம்மைத்தொகை,உரிச்சொற்றொடர் கண்டறிதல் பாகம் 20

             இலக்கண குறிப்பறிதல்
           (எண்ணும்மை,உம்மைத்தொகை,உரிச்சொற்றொடர் கண்டறிதல்)


      
           வணக்கம் தோழர்களே.நான் எழுதிவரும் இந்த தொடருக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி.
             பதிவு போட தாமதமானால் என் மின்னஞ்சலுக்கு அடுத்த பதிவை உடனே போடும்படி பல அன்புக் கட்டளைகள் வருகிறது.மகிழ்ச்சி.பணி சுமை காரணமாக பதிவிட காலதாமதமாகிறது.மன்னிக்கவும்.
             உங்கள் சந்தேகங்களை மின் அஞ்சல் மூலம் கேட்கிறீர்கள்..சிலர் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறீர்கள்.எனக்கு தெரிந்தவற்றை உங்களுக்கு சொல்லிவருகிறேன்.
             பெரும்பாலும் என்னோடு தொடர்பு கொண்டவர்கள் 'பொது அறிவு' சம்பந்தப்பட்ட பதிவை எப்போது இடுவீர்கள் என்று கேட்கிறார்கள்.பொதுத்தமிழ் இன்னும் இரண்டொரு நாட்களில் முடிந்துவிடும். பொதுஅறிவில் எவற்றையெல்லாம் அவசியம் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி நிச்சயம் பதிவிடுகிறேன்..ஆதரவுக்கு நன்றி..
       சரி தோழர்களே .பாகம் 19 ல் அடுக்குத்தொடர் மற்றும் இரட்டைக்கிளவி, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைப் பார்த்தோம்.இந்தப் பதிவில் உம்மைத்தொகை, எண்ணும்மை, உரிச்சொற்றொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைப் பார்ப்போம்.

 எண்ணும்மை:

        கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்'  எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(எ.கா)

         அல்லும் பகலும்
         காதலும் கற்பும்
         அவனும் இவனும்

 சிறப்பு எண்ணும்மை

சொற்கள் “உடனும்” என முடியும்.
(எ.கா) வானுடனும், கடவுளுடனும்

உயர்வு சிறப்பும்மை

சொற்கள் “னினும்” என்று முடியும்.
(எ.கா) வானினும், ஊனினும், தேனினும


உம்மைத்தொகை:

          கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

(எ.கா)

          அவன் இவன்
           இரவு பகல்
           இராப்பகல்

            எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்.அதுவே மரைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

உரிச்சொற்றொடர்:

           ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

 (எ.கா)

           மாநகரம்

   அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம்.இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்..

                                              1.சால
                                              2.உறு
                                              3.தவ
                                              4.நனி
                                              5.கூர்
                                              6.கழி
                                              7.கடி
                                              8.மா
                                              9.தட

        மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக்கூடிய சொற்கள்.எனவே கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் ஆரம்பிக்கும்..

(எ.கா)
    
   தடக்கை
   தவப்பயன்
   உறுபடை


அன்மொழித்தொகை

       வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை,உம்மைத்தொகை ஆகிய ஐந்து தொகைகளும் தொடருக்கு புறத்தே அமையாமல்மறைந்திருந்து பொருள் தருமாயின் அது அன்மொழித் தொகையாகும்.

(எ.கா) பொற்றொடி வந்தாள்.
(பொன்னால் செளிணியப்பட்ட வளையல்)
பூங்குழலி வந்தாள், சேயிழைக் கணவன்
தேன்மொழி நகைத்தாள், இன்மொழி சொன்னான்
சுடுகதிர் எழுந்தான்்

         என்ன தோழர்களே..பதிவு பயனுள்ளதாக இருந்ததா..பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..படிக்கும் பலருக்கும் பயன்படட்டும்..

          பதிவு குறித்து சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்
நன்றி..
=========================================================================

                                                                                                                                         அன்புடன்





பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

  1. தாங்கள் தற்போது எழுதும் பதிவு மிகவும் பயனுடையதே!
    இடையிடையே நான் தங்களுடைய கவிதையும்
    வரலாமே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  2. 5ம் வகுப்பில் படித்தது என்று எண்ணுகிறேன். றிப்பீட் ஆக உள்ளது எனக்கு..
    மிக நன்றி.
    நல்வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி அண்ணா...

    ReplyDelete
  4. தாங்கள் சொன்னதைப்போலவே செய்கிறேன் ஐயா.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. கோவைக்கவி...

    நன்றி சகோதரி..

    ReplyDelete
  6. ராஜா..

    நன்றி...

    ReplyDelete
  7. டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகிரவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய தொடர் பதிவு ..

    மிக்க நன்றி தங்களின் உழைப்பிற்கும் எங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கும் ..!

    ReplyDelete
  8. வரலாற்று சுவடுகள்..

    நன்றி தோழர்..

    ReplyDelete
  9. கிருஷ்ணசாமிMay 29, 2012 at 10:22 PM

    டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகிரவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய தொடர் பதிவு ..

    மிக்க நன்றி தங்களின் உழைப்பிற்கும் எங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கும்

    ReplyDelete
  10. sir i have scored 151 out of 200 can i get job in tnpsc group 4

    ReplyDelete
    Replies
    1. if your quota is other than oc..then 80% sure..

      Delete
  11. Madhu Sir,
    Vanakkam (IZHIVU SIRAPPU UMMAI) neengal vilakavillai athai vilakkamudiyuma? (Sir TNPSC TWO HUNDRED QUESTION THREE HUNDRED MARKS, ENAKU SARIYAGA VILANGAVILLAI EVALAVU MARKS VANGAVENDUM + CUT OFF MARKS & QUOTA PATTRI KONJAM THELIVAGA VILAKKA VENDUM ENDRU THANGALAI VENDUKIREN)
    by- Muthuraj.

    ReplyDelete
  12. அண்ணா ,
    முற்றும்மைக்கும் எண்ணும்மைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க முடியுமா ?

    ReplyDelete
  13. பதிவுக்கு நனறி

    ReplyDelete
  14. முற்றும்மைக்கும் எண்ணும்மைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க முடியுமா ?

    ReplyDelete
  15. இன்று (04.11.2012) நடந்த தேர்வில் இழிவு சிறப்பும்மை பகுதியில் கேள்வி இருந்தது இந்த இழிவு சிறப்பும்மையை எவ்வாறு தெரிந்து கொள்வது அதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது நன்றி

    ReplyDelete
  16. Madhu Sir we are waiting for your kind response please explain இழிவு சிறப்பும்மை....please please please.....

    ReplyDelete
  17. very good website for competitive examinations

    ReplyDelete
  18. No one was explained very simply like you.
    your explanations are very easy to understand.
    Thank You Brother

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com