அடிக்கடி நான்
கோபப்படுகிறேன் என்று
கோபத்திற்கும்
கோபம் வந்துவிடுகிறது..
பொறுமையாக
இருக்கலாம் என்று முடிவெடுத்தால்
என் பொறுமையைக் கண்டு
பொறுமை தன்
பொறுமையை இழக்கிறது..
ஏன் இவன்
சிந்தனை செய்தபடியே
இருக்கிறான் என்று
சிந்தனையே சிந்திக்க
ஆரம்பித்துவிடுகிறது..
நான் சோகமாய்
இருப்பதைப் பார்த்து
அந்த சோகமும்
என்னோடு சேர்ந்து
சோகம் கொள்கிறது..
எனக்கு
அழுகை வந்தால்
அந்த அழுகைக்கும்
பொறுக்க முடிவதில்லை
ஒரு ஓரமாய் நின்று
அழ ஆரம்பித்துவிடுகிறது..
இப்போது
சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
எனது சிரிப்பும் என்னைப் பார்த்து
சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது..
இன்பம் கொள்ளும்போது
அந்த இன்பம்
என்னை விட்டுச் செல்லாமல்
என்னுடனேயே
இருந்துவிடுகிறது என்று
சந்தோசிப்பதில்லை..
துன்பம் கொள்ளும்போது
அந்த துன்பம்
என்னோடு இல்லாமல்
என்னை விட்டு
ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
சந்தோசிக்கிறேன்..
----------------------------------
----------------------------------
//துன்பம் கொள்ளும்போது
ReplyDeleteஅந்த துன்பம்
என்னோடு இல்லாமல்
என்னை விட்டு
ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
சந்தோசிக்கிறேன்..//
மனிதனின் உணர்வுகளை தாங்கி நிற்கிறது
த.ம 1
பெரிய விஷயம் கவிஞரே... துன்பத்தைக் கண்டு சிரிக்கப் பழகி விட்டால் எதையும் வெல்லும் மனநிலை சித்தித்து விடும். பிரமாதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! நன்று!
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
அருமை அருமை
ReplyDeleteசிந்தனை வேகத்திற்கு வார்த்தைகளும் ஈடுகொடுத்து
கவிதையை உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது
மனம் கவர்ந்த மீண்டும் மீண்டும் படிக்கது தூண்டும்
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 4
கவிதை வித்தியாசமாக இருக்கு
ReplyDeleteமது!
ReplyDeleteதங்கள் கவிதைகள், அழகு, புதுமை,சிந்தனை வளம்,சொற்சிலம்பு
என, பல்சுவை நிறைந்தவை!
ஆனால் ஏதோ ஒரு சோகம் அதில் மெல்லிய இழையாக ஓடுவது
போல் நான் உணர்கிறேன்!
சரியா...
புலவர் சா இராமாநுசம்
அட என்னமா எழுதுரய்யா!
ReplyDeleteவணக்கம் சகோ,
ReplyDeleteஉணர்ச்சிகளின் உணர்வுகள் மனிதனின் உணர்வுகளைப் பார்த்து எப்படி வலி கொள்ளும் என்பதனை இந்தக் கவிதை சொல்லி நிற்கிறது.
இதனைப் படிக்கையில் எனக்கு எங்கே நிம்மதி எனும் பாடலில் கவியரசர்...
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனும் வரிகள் தான் நினைவிற்கு வந்து போகின்றது.
வித்தியாசமான சிந்தனையில் ஓர் கவிதை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/சம்பத்குமார்/கணேஷ்/நண்டு@நொரண்டு/ரமணீ/மனசாட்சி/புலவர்/விக்கி/நிரூபன்/
//துன்பம் கொள்ளும்போது
ReplyDeleteஅந்த துன்பம்
என்னோடு இல்லாமல்
என்னை விட்டு
ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
சந்தோசிக்கிறேன்..// -நானும் அப்படித்தான் சந்தோசிக்கிறேன்!
http://vethakannan.blogspot.com/2011/12/blog-post_25.html
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..!!
ReplyDelete! Arumai. Pudhumai. Vithiyasamaana Sinthanai Sir. Azhagu kavithai.
ReplyDeleteTM 9.
துன்பத்துக்கு மட்டும் விதிவிலக்கு..
ReplyDeleteஅருமையான கவிதை..
//சிந்திக்கும்போதெல்லாம்
ReplyDeleteஏன் இவன்
சிந்தனை செய்தபடியே
இருக்கிறான் என்று
சிந்தனையே சிந்திக்க
ஆரம்பித்துவிடுகிறது..// - நானும் இப்படி அடிக்கடி சிந்தித்தது உண்டு!
இடுக்கண் வருக்கால் நகுக! என்று வள்ளுவரின் குறள் நினைவுக்கு வந்தது. நன்றி!
ReplyDeleteதங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
த.ம.11
இடுக்கண் வருங்கால் நகுக...
ReplyDeleteதுன்பத்தையும் நேசிக்கப் பழகிக்கொள்ளச்
சொல்லும் தங்களின் கவிவரிகள் அழகு நண்பரே.
துன்பத்தையும் நேசிக்கப் பழகிக்கொள்ள....
ReplyDeleteஅழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு...
இடுக்கண் வருங்கால் நகுக, அருமையா சொல்லி இருக்கீங்க, சூப்பருய்யா சூப்பர்ப்...!!!
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
உணர்வுகளுக்கும் உணர்ச்சி!
ReplyDeleteகவிதை அருமை!
சொற்களைக் கையாண்டுள்ள விதம் அழகு; ரசித்தேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/கருணாகரன்/காட்டான்/துரைடேனியல்/கருன்/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/வேதகண்ணன்/தனபாலன்/மகேந்திரன்/ரிஷ்வன்/மனோ/ரத்னவேல்/இமா/
துன்பம் கொள்ளும்போது
ReplyDeleteஅந்த துன்பம்
என்னோடு இல்லாமல்
என்னை விட்டு
ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
சந்தோசிக்கிறேன்..
>>>
துன்பம் உங்ககிட்ட நிக்காமல் ஓடிவிடுவது எவ்வளவு நல்ல விஷயம். கவிதை அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
#துன்பம் கொள்ளும்போது
ReplyDeleteஅந்த துன்பம்
என்னோடு இல்லாமல்
என்னை விட்டு
ஓடிச்சென்றுவிடுகிறது என்றே
சந்தோசிக்கிறேன்..#
அருமை...வாழ்த்துகள்...!
மனிதனின் உணர்வுகளை் அவனை மிஞ்சும் இடங்களை அருமையாக அருமையாக வார்த்தைகளுக்குள் அடக்கி இருக்கிறீர்கள் சகோ.. நன்றி..
ReplyDeleteநீர் எழுதும் போதெல்லாம், உமது எழுத்துக்களே உம் கவிதையின் மீது காதல் கொள்வதில், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..!:)
ReplyDelete