புது வரவு :
Home » » இறை வணக்கம்

இறை வணக்கம்



     

வள்ளுவக் கவிதை

     வசன கவிதை நடையில்


                                    மதுமதி
  


 அறத்துப்பால்

     பாயிரவியல்

    (கடவுள் வாழ்த்து)
              1)  
அட்சரங்களின் ஆதி
'அ' தந்த ஒலி..
அண்டத்தின் ஆதி
ஆண்டவன் தந்த ஒளி..
குறள்-1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
--------------------------------------
             2)
அறிவில் உயர்ந்தவர்
சான்றோர்தான் காண்..
அவரை வணங்காதான்
கற்ற கல்வியே வீண்..
குறள்-2
கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்..
--------------------------------------
            3)
மலர் போன்ற நெஞ்சில்
நிறைந்து நிற்பவனின்
பாதங்களில் வீழ்பவர்
நீண்ட புகழோடு
நிலத்தினில் வாழ்பவர்..
குறள்-3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
----------------------------------------
             4)
விருப்பு வெறுப்பில்லா
பெரியோர் வழிகண்டு
நடத்தலே இன்பம்..
அவனை என்றும்
துரத்தாது துன்பம்..
குறள்-4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
----------------------------------------
             5)
கடவுள்
என்பதற்குரிய பொருளை
உள்ளார உணர்ந்தவனைக் கண்டு
துன்பம் தரும் நன்மை தீமைகள் 
தூரத்தில் போய் நிற்கும்..
குறள்-5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு..
-------------------------------------------
             6)
இறைநெறிக்குட்பட்டு
அய்ம்புலன் ஆசைகளையும்
அடக்கி ஆள்பவன்
நிலத்தில் நிலையாய் வாழ்பவன்..
குறள்-6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்..
--------------------------------------------
              7)
இணையில்லா 
இறைவனின் அடிகளை
அடைந்தவனைத் தவிர
மற்றோரது மனக்கவலையை
மாற்றுதல் கடினம்..
குறள்-7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.. ----------------------------------------------
                 8)
அறக்கடலாய் விளங்கும் 
சான்றோரின் அடிகளைப் பற்றி
நடப்பவரைத் தவிர
மற்ற எவர்க்கும்
துன்பக் கடலைத் தாண்டுவது கடினம்..
குறள்-8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது..
                 9)
-------------------------------------------------
அய்ம்புலனும் இயங்காவிடில்
ஏற்படுவது எந்நிலையோ..
எட்டுவகை குணம்கொண்ட
பகவானின் பாதம் தொட்டு
வணங்காதவனின்
நிலையும் அந்நிலையே..
குறள்-9
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை..
----------------------------------------------------
                   10)
தலைவனாக
ஏற்றுக்கொண்டவனின்
அடியைப் பற்றி நடப்பவனே
வாழ்க்கையெனும் 
பெருங்கடலை கடப்பான்..
மற்றவன் கரையிலேயே கிடப்பான்..
குறள்-10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்..
--------------------------------------------
                                                                     முகப்பு
                                                            அறத்துப்பால்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

  1. அன்பின் மதுமதி - வள்ளுவர் குறள் மதுமதியின் வசனக் கவிதையாக ,மலர்ந்திருப்பது கண்டு மகிழ்ந்தேன் - நல்லதொரு சிந்தனை -தொடர்க ......

    ஆண்டவன் - கடவுள் - இறை - இறைவன் - பகவான் என வள்ளுவரின் கருத்தோடு ஒத்துப் போய் எழுதும் போது - பெரியோர் -சான்றோர் - தலைவன் என மற்றொருவரையும் சுட்டிக் காட்டுவது சரியானதா ? ஒன்று இறைவனைப் பற்றி எழுத வேண்டும் - அல்லது ஈரோட்டுச் சிங்கம் பாணியில் எழுத வேண்டும். குழப்பம் வேண்டாமே !

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அருமையான கவிதை.

    Regards,
    Siva

    ReplyDelete
  3. வசன கவிதை நடையில் குறள்கள் ஜொலிக்கின்றன. ''மற்றவன் கரையிலேயே கிடப்பான்..'' என்ற வரிகளை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com