புது வரவு :
Home » , » புரிந்தும் புரியாமலும்...

புரிந்தும் புரியாமலும்...

  நீ சொல்ல சொல்ல
  நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. 
  நீ என்ன சொல்கிறாய் எனத்தெரியவில்லை..
  நான் என்ன கேட்கிறேன் எனத்தெரியவில்லை..
  --------------------------------------
  நீ செல்ல செல்ல
  நான் வந்துகொண்டே இருக்கிறேன்..
  நீ எங்கு செல்கிறாய் எனத்தெரியவில்லை..
  நான் எங்கு வருகிறேன் எனத்தெரியவில்லை..
  --------------------------------------


















 நீ கொல்ல கொல்ல
 நான் செத்துக்கொண்டே இருக்கிறேன்..
 நீ எதற்கு கொல்கிறாய் எனத்தெரியவில்லை..
 நான் எதற்கு சாகிறேன் எனத்தெரியவில்லை..
 -----------------------------------
 நீ தள்ள தள்ள 
 நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்..
 நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை..
 நான் ஏன் நகர்கிறேன் எனத்தெரியவில்லை..
 ----------------------------------
 எதுவும் தெரியவில்லை..
 தெரிந்தாலும் கூட
 தெரியாததைப் போலவேதான்
 காட்டிக்கொள்கிறேன்..
 புரிந்தாலும் கூட
 புரியாததைப் போலவேதான்
 காட்டிக்கொள்கிறேன்
.--------------------------------
          ******.

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

23 comments:

  1. >>*நீ தள்ள தள்ள
    நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்..
    நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை..
    நான் ஏன் நகர்கிறேன் எனத்தெரியவில்லை..

    hi hi கிளூ கிளூப்பு

    ReplyDelete
  2. //புரிந்தாலும் கூட
    புரியாததைப் போலவேதான்
    காட்டிக்கொள்கிறேன்//
    nice!

    ReplyDelete
  3. // எதுவும் தெரியவில்லை..
    தெரிந்தாலும் கூட
    தெரியாததைப் போலவேதான்
    காட்டிக்கொள்கிறேன்..
    புரிந்தாலும் கூட
    புரியாததைப் போலவேதான்
    காட்டிக்கொள்கிறேன்.//

    ஏதோ ஒர் ஏக்கம் உங்கள் கவிதையில் எதிரொலிக்கிறது சகோ!

    புலவர் சா இராமாநுசம்
    ******.

    ReplyDelete
  4. நீங்கள் கவிதை எழுத எழுத படித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் எனத் தெரிந்தே ரசிக்கிறேன். நான் பாராட்டாக என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  5. எதுவும் தெரியவில்லை..
    தெரிந்தாலும் கூட
    தெரியாததைப் போலவேதான்
    காட்டிக்கொள்கிறேன்..
    புரிந்தாலும் கூட
    புரியாததைப் போலவேதான்
    காட்டிக்கொள்கிறேன்.// அருமையான வரிகள்..

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    /நண்டு@நொரண்டு/சி.பி/ஜீ/கருன்/

    ReplyDelete
  7. அருமையான வரிகள் சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  8. /கணேஷ் அவர்கள்/

    நீங்கள் தொடர்ந்து தளத்திற்கு வந்து வாசித்து கருத்திடுவதே பெரிய மகிழ்ச்சி..

    ReplyDelete
  9. /புலவர் அவர்கள்/

    ஆமாம் ஐயா எனக்கே தெரியாமல் என் எழுத்துகளில் ஏதோ ஒரு ஏக்கம் ஒளிந்து கொண்டுதானிருக்கிறது..நன்றி.

    ReplyDelete
  10. புரிதலுக்கும் புரியாததற்கும் இடைப்பட்டதுதான் காதல்

    ReplyDelete
  11. //*நீ தள்ள தள்ள
    நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்..
    நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை..
    நான் ஏன் நகர்கிறேன் எனத்தெரியவில்லை..//

    சதுரங்கத்தின் நகர்த்தல்கள் போலத்தானே இந்த காதலும்.

    அருமை சார்.

    தமிழ்மணம் வாக்கு 8.

    ReplyDelete
  12. உங்களின் எழுதுகோல் மை சிந்த சிந்த நான் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன் என் இரசனையை...
    நல்லதோர் பகிர்வு...நன்றி தோழர்..

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    /கவிதை வீதி/துரை டேனியல்/மயிலன்/

    ReplyDelete
  14. you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
    please check and give ur comments
    http://alanselvam.blogspot.com/

    ReplyDelete
  15. இனிமை கூட்டும் வரிகள் ..
    இயல்பான நடையில் அழகிய கவிதை ..
    வாழ்த்துகள் அன்பரே

    ReplyDelete
  16. புரியாமல்ப் போகும் காதல் தரும் உணர்வு கவிதை அலையாகி இங்கு விளையாடுகின்றதே....
    அருமை!.....வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  17. தெரியவில்லை என்கிற மாதிரி தெரியவில்லை. தெரிந்தேதான் உடன்படுகிற மனசு தெரிகிறது!

    ReplyDelete
  18. அருமையான கவிதை
    சராசரி மனிதனின் நிலை இதுதானென்றாலும்
    பிரச்சனையின்றி வாழ இப்படி இருப்பதுதான்
    சரியான நிலையெனப் படுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7

    ReplyDelete
  19. ////நீ எங்கு நகர்த்துகிறாய் எனத்தெரியவில்லை.///

    சகோ என்ன இது இந்தளவு யதார்த்தத்தை மிஞ்சிய ஆளமா.. ரசிக்கிறேன் சகோ...

    ReplyDelete
  20. சொல்வதைக் கேட்பதும்,
    செல்வதை தொடர்வதும்
    கொல்வதால் சாவதுமாய்
    காதல் தள்ளுகிறது
    நாட்கள் நகர்கிறது.

    அருமை அருமை மதி.

    ReplyDelete
  21. ''..தெரிந்தாலும் கூட
    தெரியாததைப் போலவேதான்
    காட்டிக்கொள்கிறேன்..
    புரிந்தாலும் கூட
    புரியாததைப் போலவேதான்
    காட்டிக்கொள்கிறேன்...''
    அன்பின் மேலது நிலை தானே.. அறியாத அவஸ்தையும் கூட..அருமை..வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  22. இதற்கு மெல்லிய மெட்டொன்று இட்டு பாடத் தோன்றுகிறது..! அழகிய வரிகள்..!:)

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com