புது வரவு :
Home » , » தனிமை தரிசனம்

தனிமை தரிசனம்

உறங்கிப்போக
முயற்சிக்கிறேன்..
கண்கள்
கதவைத்திறந்து கொள்கிறது..

-------------------------------


தனிமையில் 
படுக்கும்போதுதான்
எனக்கு முன்னதாக
என் படுக்கை பரிதவிக்கிறது..

-------------------------------


வெள்ளை ரோஜாவும் சிகப்பு ரோஜாவும்



தலையணையை
உன்னுருவமாய் பாவிக்கிறேன்.
அது அஃறிணை என்று
அவ்வப்போது நிரூபிக்கிறது..

--------------------------------

என்னோடு நீ
இல்லாத இரவுகள்
விண்ணோடு
விண்மீன் இல்லாத
இரவாய் வெறிச்சோடி கிடக்கிறது

-----------------------------

உன் விரலது தீண்டாமல்
நான் தான் வாடிப்போய்விட்டேன்
என் விரலது தீண்டலில்
நீ வாங்கிக்கொடுத்த ரோஜா
இன்னமும் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது

--------------------------------------------

தனிமையை 
தரிசிக்கும்போதுதான்
என் கண்களுக்கும் 
தூக்கத்திற்குமான தூரம் 
எவ்வளவு என்று
எண்ணிப் பார்க்க முடிகின்றது..

--------------------------------------------

நீயில்லாத அறையில்
மின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..
என் நினைவுகள்
விருப்பப் பட்டுத்தான்
உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன..

---------------------------------------------

அணைந்து போக
ஆசைப்படும்
என் அறை விளக்கும்-உனை
அணைத்துக்கொள்ள
ஆசைப்படும்
இந்த அழகுச் சிலைக்கும்
இந்த இரவு
இலவசமாகவே ஏமாற்றத்தை
அள்ளித் தந்தது...

---------------------

நாளை
இரவு வரும்..வரலாம்..
இன்று இறந்துபோன இரவு
நாளை உயிர்த்தெழ வாய்ப்பில்லை..

--------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

20 comments:

  1. காதல் மிக அழகாக த்னனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ரசனைமிக்க வரிகள். ந்ன்று!

    ReplyDelete
  2. காதலில் விழுந்துட்டீங்களா

    ReplyDelete
  3. "இன்று இறந்துபோன இரவு
    நாளை உயிர்த்தெழ வாய்ப்பில்லை"

    >>>>

    மாப்ள இதான் டாப்பு!

    ReplyDelete
  4. ''...நீயில்லாத அறையில்
    மின்விசிறிகூட
    விருப்பமில்லாமல்தான்
    சுற்றிக்கொண்டிருக்கிறது..
    என் நினைவுகள்
    விருப்பப் பட்டுத்தான்
    உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன..''
    தனிமையின் காதலான விபரணம் சிறப்பு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. சகோ ஒரிரு வரியை மட்டும் சுட்டி மறுவரியை தாழ்த்த மனம் ஒப்பவில்லை...

    மீண்டும் ஒரு முறை எனது தளம் வந்து எனது சைட் பாரை பார்க்கவும் எனக்கு இதை விட தங்களுக்கு பரிசு தர வழியில்லை..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

    ReplyDelete
  6. விரகதாபத்தை விரசமின்றி அழகுறச் சொல்லியது அருமை.

    ReplyDelete
  7. மது,

    காதல் அழகானது.

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    /கணேஷ்/நண்டு@நொரண்டு/ராஜீ/விக்கி/கோவைக்கவி/அம்பலத்தார்/சத்ரியன்/

    ReplyDelete
  9. /ம.தி.சுதா/

    என் எழுத்துகள் தங்களுக்கு பிடித்ததில் மன மகிழ்கிறேன்.மற்ற பதிவர்கள், தங்கள் தள வாசகர்கள் என பார்க்கும் வண்ணம் தங்கள் தளத்தில் இடம் ஒதுக்கி என்னை முன்னிலைப்படுத்தி பதிவுலகுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என எதிர் பார்க்கவில்லை..என் எழுத்தின் மீதும் என் மீதும் காட்டிய அன்பிற்கு நன்றி தோழர்.

    ReplyDelete
  10. இனிய வரிகள் கவிஞரே..

    ReplyDelete
  11. தோழர்,, மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
  12. எந்த வரிகளை மேற்கோள் இடுவது........ அனைத்தும் அழகான வரிகள்...




    உங்கள் கருத்துக்காக

    காதல் - காதல் - காதல்

    ReplyDelete
  13. அனைத்தும் அருமை ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  14. நன்றி..
    கோவி/கருன்/எனக்குப்பிடித்தவை/சி.பி/M.R/

    ReplyDelete
  15. //நீயில்லாத அறையில்
    மின்விசிறிகூட
    விருப்பமில்லாமல்தான்
    சுற்றிக்கொண்டிருக்கிறது..//

    அழகு வரிகள்!

    ReplyDelete
  16. நாளை
    இரவு வரும்..வரலாம்..
    இன்று இறந்துபோன இரவு
    நாளை உயிர்த்தெழ வாய்ப்பில்லை..
    அருமை .

    ReplyDelete
  17. தனிமையை
    தரிசிக்கும்போதுதான்
    என் கண்களுக்கும்
    தூக்கத்திற்குமான தூரம்
    எவ்வளவு என்று
    எண்ணிப் பார்க்க முடிகின்றது..
    வினோதமான கற்பனை. அருமை நண்பரே....

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com