புது வரவு :
Home » , , , » உயிரைத் தின்று பசியாறு - அத்தியாயம் - 7

உயிரைத் தின்று பசியாறு - அத்தியாயம் - 7

                                 உயிரைத்தின்று பசியாறு
                                                              மதுமதி
                                               (க்ரைம்..க்ரைம்..க்ரைம்)

                       ஆறாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்.

                                   அத்தியாயம்-7

 ணி ஒன்பது ஐம்பது.
          கல்லூரி மாணவிகளால் கர்ப்பமாக்கப்பட்ட அந்த மாநகரப் பேருந்து, கடற்கரைச் சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
"ஏய் பூஜா,ஏண்டி ஒரு மாதிரி இருக்கே..?உடம்பேதும் சரியில்லையா..?
         தோழி சரிதா கேட்க இல்லை என்பதைப் போல தலையாட்டிய பூஜா கடற்கரையையே வெறித்தபடி இருந்தாள்.(இந்த பூஜா யார் என்று தெரிகிறதா.. முதல் அத்தியாயத்தில் பார்த்தோமே அலெக்ஸின் காதலி பூஜா அவளேதான்)
"ஏய் என்னடி இப்படி பீச்சையே வெறிச்சு பாத்துட்டு வரே..என்னாச்சு உனக்கு"
"ஒண்ணுமில்ல சரிதா..சும்மாதான்"
"சரி உனக்கு விசயம் தெரியுமா"
"என்ன"
         என்று கேட்டபடி சரிதாவை பார்த்தாள் பூஜா.
"நேத்து ராத்திரி யாரோ ஒருத்தனை பீச்சுல வச்சு கொலை பண்ணிட்டாங்களாம்"
            சரிதா சொல்ல பூஜாவுக்கு குப்பென வேர்த்தது.அதைக் காட்டிக் கொள்ளாதவாறு,
"ம்..நானும் பேப்பர்ல படிச்சேன்" என்றாள்.
           கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்று தன் கர்ப்பத்தைக் கலைத்தது.
வியர்த்துக் கொட்டிய முகத்தை தன் கர்ச்சீப்பால் துடைத்தபடியே  இருந்த பூஜாவைப் பார்த்த சாரதா,
"பூஜா..இன்னைக்கு உன் முகமே சரியில்லையே"
           என்று சாரதா கேட்க,ஏதோ சொல்ல எத்தனித்த பூஜாவின் கையிலிருந்த புத்தகம் தவறி விழ குனிந்து எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.இரண்டடி நடந்தவள் அப்படியே நின்றாள்.
           அந்த புத்தகத்தை பரபரப்புடன் மீண்டும் புரட்டிப் பார்த்தாள்..அவளுக்குள் குப்பென்று வேர்த்தது.
"ஏய் என்னடி ஆச்சு உனக்கு..புக்க கீழே போடுறே..அதை எடுத்து டென்சனா புரட்டி புரட்டிப் பாக்குற"
"ஒண்ணுமில்ல சாரதா அவசரமா ஒரு போன் பண்ணனும் உன்னோட மொபைல கொஞ்சம் கொடேன்"
 "இந்தா.. பேசிட்டு வா நான் போறேன்"
            என்ற படி தன் செல்போனை கொடுத்துவிட்டு சாரதா நகர,அவசர அவசரமாக எண்களைத் தட்டினாள்.உடனே தொடர்பு கிடைக்க,
"அலெக்ஸ் நான் பூஜா"
           பதற்றமாய் பேசினாள்.
"சொல்லு பூஜா ஏன் பதட்டமா பேசுற?
"அலெக்ஸ் என்னோட நோட் புக்ல வச்சிருந்த என்னோட காலேஜ் ஐடென்டி கார்டை காணோம்"
"அதுக்கென்ன இப்ப..இதுக்கு ஏன் இப்படி பதட்டப்படுறே..வீட்டுல எங்கேயாவது விட்டிருப்பே.."
          அலெக்ஸ் சொல்ல மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்த பூஜா,
"இல்லை அலெக்ஸ்..நேத்து பீச்சுல பிணத்து மேல விழுந்தேனே.அப்போ என் ஐடி கார்டும் அங்கே விழுந்திருக்குமோன்னு பயமா இருக்கு"
           என்று மெதுவான குரலில் சொல்ல,இப்போது பதட்டம் அவனையும் பற்றிக் கொணடது.
"இ..இ.ல்ல பூஜா.. வேற எங்கேயாவது விழுந்திருக்கும்.,.ந..நல்லா யோசிச்சு பாரு"
"இல்ல அலெக்ஸ் வேற எங்கேயும் விழ வாய்ப்பே இல்ல..நான் காலேஜ் வாசல்ல நிக்கிறேன்..நீ கொஞ்சம் வாயேன்"
          சொல்லிவிட்டு இணைப்பை துண்டிக்க சரிதா வந்தாள்.
"ஏய் பூஜா..உன்னைத் தேடி உங்க மாமா வந்திருக்கார்"
"மாமாவா"
           என்று நெற்றியை சுருக்கிய பூஜா,
'என்னை கல்லூரியில் தேடி வரும் அளவிற்கு மாமா யார்' என யோசித்துவிட்டு,
"எங்கே இருக்கார்"  எனக் கேட்டாள்.
 "அதோ அந்த அரச மரத்தடியில நிக்கிறார்..போய் பார்த்துட்டு சீக்க்ரம் வா"
        என்று சொல்லிவிட்டு சாரதா நகர அந்தப் பக்கமாய்ப் பார்த்தாள். அங்கே வாட்டசாட்டமாய் ஆறடி உயரத்தில்  சூர்யா நின்றிருந்தான்.
'இவரை இதற்கு முன்பு பார்த்ததில்லையே'
         என்று யோசித்துக்கொண்டே இவள் நின்றிருக்க, அவளது அருகில் சூர்யா வந்தான்.
"நீங்க பூஜா தானே"
         அவனாகவே கேட்க,ஆமாம் என்பதைப் போல தலையாட்டிய பூஜா,
"நீ..ங்க" என்றாள்.
"நான் போலீஸ்"
           சூர்யா சொன்ன வினாடிதான் பாக்கி அவள் உடலெங்கிலும் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
"உங்ககிட்ட ஒரு விசாரணைக்காக வந்திருக்கேன்..காலேஜ விட்டு வெளியில போயிடலாமா''
"இ..ல்ல .எ..ங்கி.ட்ட என்ன விசாரணை..என்னால வர முடியாது..க்ளாஸூக்கு டைம் ஆச்சு"
"அப்ப நீங்க க்ளாஸ்க்கு போங்க..நான் உங்க பிரின்ஸ்பால் கிட்ட சொல்லிட்டே உங்களை கூட்டிட்டு போறேன்"
           அவள் பேசவில்லை.சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"வாங்க"
         என்று சொன்ன சூர்யா, கல்லூரியை விட்டு வெளியேறி கடற்கரைச் சாலையைக் கடந்து பத்தடி நடந்து ஒரு புங்கமரத்தடியில் நிற்க,பூஜாவும் நின்றாள்.
"பூஜா உங்களுக்கு தினேஷ்ன்னு யாரையாவது தெரியுமா"
"தெ..ரியாது சார்"
"பொய் சொல்லவேண்டாம்"
"இ..ல்ல சார் எனக்கு அப்படி யாரையும் தெரியாது"
"சரி நீங்க லவ் பண்றீங்களா?"
"இ..ல்ல சார்"


"பொய் சொன்னா ஸ்டேஷன் போக வேண்டி வரும் பரவாயில்லையா"
"-----------------------------------------------------------------"
"சரி உங்க காலேஜ் ஐடி கார்டை கொடுங்க"
 "அது..தொ..லைஞ்சு போயிடுச்சு"
"எப்ப தொலைஞ்சது..எப்படி தொலைஞ்சது"
"....................................................................................................."
           அவளிடம் பதிலில்லை.
"சரி நேத்து நைட் ஏழு மணிக்கு எங்க இருந்தீங்க?
"பீச்சுல"
"ம் ..இப்பத்தான் உண்மை வருது"
".............................................................................."
"நேத்து பீச்சுல தொலைஞ்சிடுச்சு அப்படித்தானே "
"ஆ..மா சார்"
        என்றவளின் கண்களில் பயத்தைப் பார்த்தான் சூர்யா.(ஆமா.. யாருய்யா இந்த சூர்யான்னு யோசிக்கிறீங்களா..சரிதான்..ராஜேஷ்குமாருக்கு ஒரு விவேக்,சுபாவுக்கு ஒரு நரேன்,பி.கே.பி க்கு ஒரு பரத் இந்த வரிசையில மதுமதிக்கு சூர்யான்னு "மாலைமதி"யில ஆரம்பிச்சேன்..வேற வழியில்லாம இன்னும் பயன்படுத்துறேன்)
 "சரி.பீச்சுல யார் யார் இருந்தீங்க?"
"பிரெண்ட்ஸ்களோட இருந்தேன்"
"அப்படியா..அப்ப அவுங்களையும் கூப்பிட்டு விசாரிக்கலாமா?"
"வே..ண்டாம் வேண்டாம் சார்"
"------------------------------------------------------"
                பூஜா மௌனம் காத்தாள்.
"உங்களையும் உங்க லவ்வரையும் நேத்து நைட் ஏழுமணிக்கு பீச்சுல பாத்ததா  ரவுண்ட்ஸ் வந்த போலீஸ் சொல்லுதே"
               பூஜா எச்சிலை மட்டுமே விழுங்கினாள் பேச்சில்லை.
"என்ன"
              சூர்யாவின் குரலில் கோபத்தை உணர்ந்தாள்.
"ஆமா சார்"
"உங்க காதலரோட பேரென்ன"
"அ..லெக்ஸ் சார்"
"அவருக்கு வேற பேரு ஏதாவது"
"இல்ல சார் அலெக்ஸ் மட்டும்தான்"
"சரி.நீங்க பீச்சுல இருந்து எத்தனை மணிக்கு கிளம்பினீங்க"
"நான் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிட்டோம் சார்"
               பொய் சொன்னாள்.
"நீங்க கிளம்பிட்டீங்க உங்க காதலர்"
"அவர் அதுக்கப்புறம் தான் சார் கிளம்பினார்"
              மீண்டும் பொய் சொன்னார்.
"அதுக்கப்புறம் அவரை பாத்திங்களா..பேசினீங்களா?"
"இல்ல சார்"
              மீண்டும் பொய் சொன்னார்.சூர்யா நான்கைந்து வினாடிகள் யோசித்து விட்டு பின்பு சொன்னார்.
"பூஜா நான் சொல்றத கேட்டு அதிர்ச்சியாகக்கூடாது"
              என்று சொன்னவனை மிரட்சியாகப் பார்த்தாள் பூஜா.
"யெஸ் உங்க காதலர் கொலை செய்யப்பட்டிருக்கார்'
             சூர்யா சொல்லிக்கூட முடிக்கவில்லை..இடைமறித்த பூஜா,
"நோ......"என்றாள்.
"ஸாரி பூஜா..உங்க காதலர் கொலை செய்யப்பட்டிருக்கார்"
"இல்ல சார் இல்லவே இல்ல"
              என்று பூஜா சொல்ல சூர்யாவை செல்போன் அழைத்தது.எதிர் முனையில்  பீச் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அருள்மதி.
"சொல்லுங்க அருள்மதி"
"ஸார் அந்தப் பொண்ணைப் பாத்துட்டீங்களா?
"பேசிட்டிருக்கேன்..நீங்க குரோம்பேட்டையில இருக்கிற அவனோட பேக்டரிக்கு போங்க நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுறேன்."
               சொல்லிவிட்டு போனை அணைத்த சூர்யா பூஜாவைப் பார்த்தான்.அவள் இன்னமும் மிரண்டு போய்தான் இருந்தாள்.
"பூஜா..நீங்க உங்க காதலரை விட்டு பிரிஞ்சு போனதுக்கப்புறம் அவரை யாரோ கொலை பண்ணியிருக்காங்கன்னு முதல்ல நாங்க சந்தேகப்படுறோம்."
          சொன்ன  சூர்யா அவளைப் பார்த்தான். அவள் பேசவில்லை.அவனே தொடர்ந்தான்.
"இன்னொன்னு.., நீங்க அங்க இருக்கும்போது கூட கொலை முயற்சி நடந்திருக்கலாம்..நீங்க பயந்து போய் அங்கிருந்து போயிருக்கலாம்..இதுல எது சரின்னு நீங்கதான் சொல்லனும்"
"இ..ல்ல சார்.... இல்ல ..என்னோட காதலர் கொலைசெய்யப்படலை"
"என்ன சொல்றீங்க..உங்க காதலர்  கொலைசெய்யப்படலையா"
"ஆமா சார்..அதோ அங்கே நிக்கிறாரே அலெக்ஸ். அவர் தான் என்னோட காதலர்"
          அவள் சுட்டிக் காட்டவே,அதுவரை அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த அலெக்ஸ் இவர்களிடம் வந்தான்.அவனை அவன் அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான்.
"அப்ப போலீஸுக்கு தகவல் கொடுத்தது நீங்கதானா"
"ஆமா சார்"
                என்றான் அலெக்ஸ்.
"நீங்க ரெண்டு பேரு பீச்சுக்கு எத்தனை மணிக்கு வந்தீங்க"
"ஏழு மணிக்கு வந்திட்டு எட்டு மணிக்கு கிளம்பிட்டோம் சார்"
"ஏதாவது அலறல் சத்தம் கேட்டுச்சா?"
"இல்ல சார்"
                அலெக்ஸ் சொல்ல,யோசித்த சூர்யா தன் பேண்ட் பாக்கெட்டில்  கையை விட்டான்.
"பூஜா..இந்தாங்க உங்க ஐடி கார்டு..இனிமே எப்பவும் கவனமா இருங்க. மறுபடியும் தேவைபட்டா உங்களை வந்து நான் சந்திக்கிறேன்.அலெக்ஸ் உங்களயும் தான் எப்ப வேணுமோ அப்ப கூப்பிடுவேன் தவறாம வரணும் சரியா"
"சரி சார்"
"சரி உங்க ரெண்டு பேரோட வீட்டு அட்ரஸ எழுதி கொடுத்துட்டு போங்க"
               சூர்யா சொல்ல் அலெக்ஸ் எழுதினான்.பூஜா எழுதவில்லை.
"இதுல பயந்துக்க ஒண்ணுமில்லம்மா..தாராளமா நீங்க எழுதி கொடுக்கலாம்.உங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டோம்"
               அவன் சொல்ல அவளும் எழுதிக் கொடுத்தாள்.
"இந்த கேஸை முடிக்க உங்க ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம்"
               சொன்ன சூர்யா ஓரமாய் நிறுத்தியிருந்த தனது ஜீப்பை நோக்கிப் போக     பூஜாவின் "லப்" "டப்" ஓசை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
=========================================================================
                                                                                                  (இன்னும் அதிகரிக்கும்)
 எட்டாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்.
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
-------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

5 comments:

  1. போலீžஸ்காரங்களை ‘மாமா’ன்னு சொல்லுவாங்க... இங்க போலீஸே அப்படிச் சொல்லிட்டு வந்து பூஜாவை விசாரிக்குது. ஹா... ஹா... கவிஞரே... நல்லவேளை... நான் ராணிமுத்து நாவலைப் படிக்கலை. படிச்சிருந்தா இப்படி தொடராக் காத்திருந்து படிக்கிற சுவாரஸ்யம் போயிருக்கும். இன்ட்ரஸ்ட்டாவே கொண்டு‌ போறீங்க...!

    ReplyDelete
  2. பூஜாவின் லப்டப் மட்டுமல்ல, என் லப்டப்பும் அதிகமாயிருச்சு...

    தொடர் செம இண்டரஸ்ட்டிங்

    ReplyDelete
  3. தொடர் சுவாரஸ்யமாய் போய்க்கொண்டு இருக்கிறது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. where can i get the next part of this crime story....
    i have read upto 7th part

    ReplyDelete
  5. Where is next part(8). It's too late

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com