புது வரவு :

சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது!

              வணக்கம் பதிவுலகத் தோழமைகளே..

              மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை சந்திக்கிறேன்..ஆம்..வரும் ஆகஸ்டு 26 ம் நாள் சென்னையில் நடைபெற இருக்கும் மாபெரும் பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. அச்சந்திப்பிற்கு பதிவர்களை அன்போடு அழைக்க, அழைப்பிதழும் தயார் செய்யப்பட்டுள்ளது.இதோ உங்களை அன்போடு அழைக்கிறேன்.

வருக! வருக!  

         உங்களுக்கான அழைப்பிதழை கீழே இட்டுள்ளேன். அதைப் பெற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இரு கரம் கூப்பி எனது சார்பாகவும் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாகவும் அன்போடும் மகிழ்ச்சியோடும் கேட்டுக்கொள்கிறேன்..



                                                                                                     உங்கள் வரவை எதிர்நோக்கும் அன்பன்



Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

47 comments:

  1. பதிவர்கள் பலரையும் ஒரே இடத்தில் சந்திக்கக் கிடைக்கும் மிக அருமையான சந்தர்ப்பம் இது! இதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவில்லையே என்று மனம் துவள்கிறது. விழா சிறப்புற நடைபெற என் இனிய வாழ்த்துக்கள். விழாவை இனிதே திட்டமிட்டு நடத்தும் பதிவர்களுக்கும், கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வரும்போது சொல்லுங்கள் சந்திப்போம்..உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..

      Delete
  2. பார்க்கவே ஆசையா இருக்கு நடந்து முடிந்தவுடன் சூப்பர் பதிவா போட்டுடுங்க

    ReplyDelete
  3. பதிவர் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வெற்றியடையும்..

      Delete
  4. சென்னை யாவரையும் வரவேற்பது குறித்து ஆனந்தம்.... அதில் நானும் இருப்பது பரமானந்தம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சீனு மகிழ்ச்சி..

      Delete
  5. மதுரை வலைப்பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    வணக்கம் வலையுலக நண்பர்களே,

    மதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வலைப்பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    இணையுங்கள் நண்பர்களே
    மதுரை வலைப்பதிவர்கள் குழுமம்

    ReplyDelete
    Replies
    1. அப்படிப்போடுங்க..

      Delete
  6. வரவேற்பிற்கு நன்றி!

    ReplyDelete
  7. அனைத்து வலை உலக நண்பர்கள் மற்றும் சகோதர உறவுகளை வருக வருகவென வரவேற்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் உறவுகளே..

      Delete
  8. பதிவர்கள் பெரும்விழா சிறப்படைய என் வாழ்த்துக்கள் சார் ...

    ReplyDelete
  9. சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஆம்..தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ReplyDelete
  12. அசத்திப்புடுவோம் அசத்தி .

    நாளை காலை "விழா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களுடன்" விரிவாய் பதிவிடுகிறேன்

    ReplyDelete
  13. விழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 8)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..விழாவில் சந்திப்போம்.

      Delete
  14. சந்திப்போம் விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. ஆம்..இன்னும் இரு வாரங்கள்தான்...சந்திப்போம்

      Delete
  15. அதீத நம்பிக்கை அதிவிரைவில் கைகொள்ளும்
    என்பது உண்மை ,.............அதற்க்கு சாட்சியாக தமிழ் வலை பதிவர்கள் சந்திப்பு

    சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. முயற்சி திருவினையாக்கும்..விழா சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்து வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. விழா சிறப்பிக்க அன்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. விழா சிறப்பிக்க அன்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நிச்சயம் தோழர்.

    ReplyDelete
  20. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. பதிவர் சந்திப்பு சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. காத்திருக்கிறேன் நண்பரே
    அந்த பொன்னான தருணத்திற்காக...

    ReplyDelete
  23. சென்னை வருவதற்கு என் உடல் நலக் குறைவு தடையாக உள்ளது.
    பதிவர் சந்திப்பு மிக்க பயன் தருவதாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. நன்றி விழாவில் சந்திப்போம்

    ReplyDelete
  25. விழா சிறக்க வாழ்த்துகள்...
    வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  26. விழா சிறப்பிக்க அன்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  27. சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். சென்னைவாசியான எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் விழாவில் பங்கேற்று நிச்சயம் பயனடைவேன். விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  28. இன்றுதான் தங்கள் வலைப்பதிவில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

    தங்களின் இந்த அற்புதமான ஏற்பாடு வெகு சிறப்பு. தமிழ் வலைப்பதிவுகள் இந்த விழா வழி மேலும் சிறப்புறும்.

    தங்களின் சேவை சிறக்க எனது மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்.


    அன்புடன்,

    மனிதநேயக் கவி கா.ந.கல்யாணசுந்தரம்

    நிறுவனர், செய்யாறு தமிழ் சங்கம்

    http://kavithaivaasal.blogspot.in/

    ReplyDelete
  29. வணக்கம் !
    மிகவும் பெருமையாக இருக்கிறது இதுப்போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள இயலவில்லை என்கின்ற மன வருத்தம் இருந்தாலும் ...!குடும்ப நிகழ்ச்சியை வளமுடனும் நலமுடனும் அரங்கேற ...வாழ்த்துக்கள் !
    என்னுடைய அருமை தோழி சசிகலாவின் தூரிகைத்தூறல் கவிதை நூல் வெளியீடும் இணைந்து நடப்பதால் ஒரே ..ஆனந்தம்தான் !இந்த ஆனந்தத்தை என் கண்கள் களிக்க வில்லையே ஏங்குகிறது !நான் மட்டும் தாயகத்தில் இருந்திருந்தால் தரமாக அமைய சிறு உரமாக அமைந்திருப்பேன் ..!என் கரம் அதில் உதவிட முனைந்திருக்கும் !அந்த கொடுப்பினை இல்லாததால் ....தவித்துக் கொண்டிருக்கிறேன் .
    www.kavingnermubark.blogspot.com

    ReplyDelete
  30. அருமையான விழா...ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பாக சிறக்க வேண்டுகிறேன்... நட்புக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு நடத்தவேண்டிய இது நம்முடைய திருவிழா... வாருங்கள் வந்து நடத்தி நடப்பதையும் கண்ணார ரசித்து காதார கேட்டு வாயார புகழை மற்றவர்களுக்கு பரப்புவோம்... இதனை ஒரு கடமையாகவே ஏற்று செய்வோம்....

    ReplyDelete
  31. பதிவர் சந்திப்பு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com