புது வரவு :

தெரியாதவை

                       தெரிந்த விசயங்களை விட
                       தெரியாத விசயங்களை
                       தெரிந்து கொள்ளவே
                       எண்ண அலைகள்
                       ஆர்ப்பரிக்கிறது..

                        எதற்கென்று
                        தெரியாத போது
                        இருந்த ஆர்வம்
                        அதற்கென தெரிந்ததும்
                        அடக்கமாகி விடுகிறது..
                         
                          
                         தெரியாதவற்றை 
                         தேடித் திரியும் போது
                         தெரிந்து கொள்ள
                         தேவையில்லாதவற்றையும்
                         தெரிந்து கொள்ள முடிகிறது..

                         தெரியாதவைகளை
                         தெரிந்து கொள்ளும்போது
                         தெரிந்தவைகளில் சில
                         தெரியாமல் போகிறது..


                         தெரியாதவை
                         எவையென
                         தெரிந்து கொள்ளவே
                         தெரியாமற் போகிறது..

                         தெரியாதவை
                         எது எனக் கேட்டால்
                         தெரியவில்லை..
                         அவைதான்
                         தெரியாதவை ஆயிற்றே.. 
                          ...................................................
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

27 comments:

  1. அருமையாக இருந்தது சார்.

    ReplyDelete
  2. எனக்கு எதுவும் தெரியவில்லை. சற்று ஆழ்ந்து யோசித்து விட்டுச் சொல்கிறேன் கவிஞரே....

    ReplyDelete
  3. therindha vatraiyum theriyada vatraiyum patri therindho theriyamalo thelivaga kooriulleer...arumai

    ReplyDelete
  4. ஐயா தமிழ் புலவரே...

    தலை சுத்துது...மீண்டும் ஸ்டடியா.... வாரேன்

    ReplyDelete
  5. தெரிந்தது தெரியாதது குறித்து
    தெரியாதவர்களும் மிக அழகாகத் தெரிந்து கொள்ளும்படியாக
    தாங்கள் வடித்துள்ள பதிவுஅருமை
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
    கற்பனை தீர்ந்துவிடும்....

    கண்ணில் தோன்றா காட்சியில் தான்
    கற்பனை நீண்டு வரும்...


    -- ஒரு திரை இசை..-

    ReplyDelete
  7. மிக கலக்கல் அன்பரே ..
    தெரியாடஹ்வைகள் மீது எப்பவுமே ஒரு ஈர்ர்ப்பு அதிகமாத்தான் உள்ளது ..

    ReplyDelete
  8. தெரியாதவைகளை
    தெரிந்து கொள்ள முயலும்போது
    தேவை இல்லாமல் சிலதை
    தெரிந்து கொள்ள நேரிடுகிறது

    அதேகணம்
    தெரிய முயன்றது
    தெரியாமல் போகிவிடும்

    எவ்வளவு பெரிய உண்மை
    ரெம்ப அழகா ஆழமாய் சொல்லிடீங்க கவிஞரே

    ReplyDelete
  9. கவிதையில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து
    வெவ்வேறு பொருள்தந்து,இருக்கும் வார்த்தை விளையாட்டு
    அருமை மது!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. தெரியாததைப் பற்றி நன்றாகத்
    தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
  11. படித்து முடித்தது தெரிந்ததெல்லாம் தெரியாமல் போய் விட்டது!

    ReplyDelete
  12. என்னவோ எனக்கு தெரிஞ்சாகனும் . அருமைங்க .

    ReplyDelete
  13. "தெரியாதவைகள
    தெரிந்து கொள்ளும்போது
    தெரிந்தவைகளில் சில
    தெரியாமல் போகிறது.."

    தெரியாதது என்னவென்று
    தெரிந்து கொள்ளலாமென வந்தேன்
    இந்த வரிகள் என்னை
    தெரிந்து கொண்டதை மட்டும்
    தெரிந்தவையாக வைத்துக்கொள்
    தெரியாதவையை தெரிந்தவையாக
    மாற்றிவிட
    தெரிந்துகொள்ள வேண்டியது
    ஆயிரம் இருக்கிறது என
    தெரிந்து கொண்டேன்......

    அப்பாட ஒரு வழியா முடிச்சிட்டேன்.....

    ReplyDelete
  14. திரைப்பட இயக்குனர் விசு [மக்கல் அரங்கம்] பாணியில் நல்லவே எழுதியிருக்கீங்க.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. enna sollanunu-
    theriyala!

    theriyaathatha -
    sollavun theriyala!

    ReplyDelete
  16. மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  17. தெரியாததை அருமையா தெரியவச்சுருக்கீங்க.....

    ReplyDelete
  18. கவிதையில் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறீர்கள். இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. ஒன்றுமே தெரியவில்லை.


    மகளிர்தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  20. இன்னுமொருக்கா நிதானமாக வாசித்தால்தான் புரியும்போல இருகிகிறது. ஆயினும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. தெரியாதவை
    எவையென
    தெரிந்து கொள்ள
    தெரியாமற் போகிறது..//நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  22. //தெரியாதவற்றை
    தேடித் திரியும் போது
    தெரிந்து கொள்ள
    தேவையில்லாதவற்றையும்
    தெரிந்து கொள்ள முடிகிறது..//

    இங்க மட்டும் ‘முடிகிறது’ என்பதற்கு பதில், ‘வேண்டியிருக்கிறது’ என்று முடித்திருந்தால் கச்சிதமாய் இருந்திருக்கும்..! :)

    ReplyDelete
  23. ஆமாம் திவயா சரிதான்..அப்படியே மார்றிவிடுகிறேன்..நன்றி..

    ReplyDelete
  24. தெரியாதனவற்றை தெரிந்து கொள்ள முற்படும் போது தான் மனிதன் தெளிவடைகின்றான் அன்றேல் அவனுடைய வளர்ச்சி என்றோ சாய்ந்திருக்கும்.


    நற்கவி படைத்தமைக்கு நன்றி

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com