செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செல்லுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை டி.என்.பி.எஸ்.சி செயலாளர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டார்.
வருவாய்த்துறையில் 1870 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலியிடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்பு கொடுத்திருந்தது.இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடை தேதியாக 10.08.2012 என்றும் வங்கி அல்லது தபால் நிலையங்களில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 14.08.2012 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.. கடைசி 2 நாட்கள் மட்டும் மட்டும் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.கட்டணங்களை வரும் 18 ந்தேதி வரையிலும் கட்டலாம்.
எனவே மேற்கண்ட தேதிக்குள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்ப கட்டணம் இரண்டையும் செலுத்திவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800-425-1002 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்..
Unkal panikku valthukkal kavinjare
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅறிந்துகொண்டேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
தேவையான நேரத்தில் தேவையான பதிவு!
ReplyDeleteதங்கள் பணி தொடரட்டும்.
ReplyDelete