புது வரவு :

வலைப்பதிவர் கவனத்திற்கு..

           ணக்கம் வலைப்பதிவு தோழர்களே..வரும் ஆகஸ்டு மாதம் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு ஆகி வருவது உங்களுக்கு தெரியும்.

           இந்நிகழ்ச்சி குறித்த விபரங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.. அதை வாசிக்காதவர்கள் இங்கே சென்று வாசியுங்கள்..

           
          நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பதிவர்கள் கலந்து கொண்டு கவிதை பாட கவியரங்கம் ஏற்பாடு ஆகி வருகிறது.இக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை பாடும் ஆர்வமுள்ள அன்பர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் கவிதை பாடுவதை உறுதி படுத்திக் கொள்ளுமாறு சொல்லியிருந்தோம். இதுவரையிலும் 15 தோழர்கள் கவிதை பாட வருவதாய் உறுதியளித்திருக்கிறார்கள்.. எனவே மேற்கொண்டு கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதை பாடும் தோழர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

           அதுமட்டுமல்லாது பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தோழர்கள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தாங்கள் வருவதை உறுதி செய்து வருகிறார்கள்.இச் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழமைகள் தொடர்பு கொண்டு வருகையை உறுதிபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தோழர்களின் பட்டியல் முழுமையடைந்தால்தான் மேற்கொண்டு சில ஏற்பாடுகள் செய்ய வசதியாயிருக்கும்.எனவே காலம் தாழ்த்தாமல் தங்களின் வருகையை
உறுதி படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்..நன்றி..

          தங்களின் வருகையை உறுதி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

      மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
      சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)-94445 12938
      புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)- 90947 66822
      சசிகலா(தென்றல்)-99410 61575

                                                                                                                                        அன்புடன்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

21 comments:

  1. விரைந்து வருகையைப் பதிவு செய்ய வேண்டுகிறோம்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  2. அவசியம் கலந்து கொள்ள எண்ணியுள்ளேன்
    மின்னல் வரிகள் கணேஷ் அவர்களிடம்
    தகவல் தெரிவித்துள்ளேன்
    தகவலுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. வருக வருகவென வரவேற்கிறோம்.

    ReplyDelete
  4. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பதிவர்கள் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!!!!!!!!!

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞரே....!

    ReplyDelete
  8. நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பதிவர் சந்திப்பு வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  10. நிகழ்ச்சிக்கு நானும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழரே..

      Delete
  11. வருகிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அரசன்..

      Delete
  12. அன்பின் மதுமதி - வருவதற்கு முயல்கிறேன் - சந்திப்பும் கவையரங்கமும் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவை எதிர்பார்க்கிறோம் ஐயா..

      Delete
  13. வர முயல்கின்றேன் !!! தகவலுக்கு நன்றிகள் !!!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள், வருகிறேன்.

    ReplyDelete
  15. பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com